உலகம் முழுதும் வசூலில் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “கிரீஷ்-3’ இதன் ப்ரோமோஷன் நிகழச்சிக்காக சென்னை வந்திருந்தார் ஹிருத்திக். அவர் வரும் தகவல் தெரிந்து பல இடங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்து குவிந்து விட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிரிஷ் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான அப்பா ராகேஷ் ரோஷனுடன் வந்து இறங்கினார் ஹிருத்திக். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, எல்லா கேள்விகளுக்கும் படு ஜாலியாக பதிலளித்தார். “ஷாருக்கான் போல நானும் தமிழ் கேரக்டர்களையும், படத்தில் தமிழ் பேசியும் நடிப்பேன். இது என் அடுத்த படத்திலேயே இதை நான் செய்வேன். அதேபோல், நல்ல கேரக்டர்கள் அமைந்து என்னை அழைத்தால் நிச்சயம் தமிழ் படத்தில் நடிப்பேன்.” என்றார் ராகேஷ்.