இன்று காலையில் நடந்த ’நான்தான்டா’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா வந்திருந்தார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், “ஏன் எப்போதும் தாதாக்களை பற்றியே படம் எடுக்குறீங்க?” என்று கேட்க, ”எனக்கு சின்ன வயசிலருந்து தாதாக்களை பிடிக்கும் காந்தியை எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு தாதாக்களையும் பிடிக்கும்” என்று கூலாக பதிலளித்தார் ராம்கோபால் வர்மா.