
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’ மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம் பாகங்களை சந்திக்க இருக்கிறது.. இந்த வருடத்தின் முதல் ஆரம்பமாக ஆர்.கே.செல்வமணி-பிரசாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள ‘புலன் விசாரணை-2’ வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது..
கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் கிட்டத்தட்ட தயார் நிலையில் இருப்பதால் இந்த வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தெரிகிறது. இன்னொரு பக்கம் ‘ஜித்தன்-2’வும் பரபரப்பாக தயாராகி வருகிறது. இதுதவிர ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை பற்றியும் ஹரி சூசகமாக தெரிவித்துள்ளார். ‘தெகிடி’ படத்திற்கும் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆலோசித்து வருகிறார்களாம்.. ஆக இந்த வருடம் இரண்டம் பாகங்களால் களைகட்டும் என்றே தெரிகிறது.
Comments are closed.