நிதின் சத்யா ஒரு திறமையான நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘காலாட்படை’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் 2007ல் வெளியான ‘சென்னை-28’ படமும் அதே வருடம் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘சத்தம் போடாதே’ படமும் தான் நிதின் சத்யா மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பின. அதன்பின்னர் ‘பந்தயம்’, ‘முத்திரை’ என சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.
தற்போது இவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுதவிர சுந்தர்.சியின் ‘அரண்மனை’ மற்றும் ‘திருடன் போலீஸ்’ படத்திலும் நடித்து வருகிறார் நிதின் சத்யா. இன்று பிறந்தநாள் காணும் நிதின் சத்யாவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.