ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமானவர் அனிருத் மட்டும்தான். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் கூட்டணியில் இவரது ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்க, ‘கொலவெறி’ பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அடுத்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என இவர் இசையில் படங்கள் வெளியாகி பாடல்களும் சூப்பர்ஹிட்டாக வலம் வருகின்றன.
தற்போது தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயனின் ‘மான்கராத்தே’ இவற்றுடன் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்துக்கான பின்னணி இசை என படுபிஸியாக இயங்கிக்கொண்டிருக்கிறார் அனிருத். இன்று பிறந்தநாள் காணும் அனிருத்திற்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.