மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளை மேம்படுத்த, நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள் ஜெயில் நிர்வாகத்தினர். இந்த கலை நிகழ்ச்சியில் தற்போது சிறையில் இருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 20 ஜெயில் கைதிகள் பங்கேற்று நடனமாடுவதாக இருந்தது.
இதில் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம் பெற்ற லுங்கி டான்ஸ், ‘முன்னாபாய்’ படத்தில் இடம் பெற்றதேசபக்தி பாடல் உட்பட பல பாடல்களுக்கு நடனம் ஆட பயிற்சியும் எடுத்து வந்தனர் சஞ்சய் தத் குழுவினர். ஆனால் மும்பையிலுள்ள பால் காந்தர்வ் ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சியை பாதுகாப்பு காரணம் கருதி ரத்து செய்துவிட்டார்கள். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் சஞ்சய் தத்.