‘புறம்போக்கு’ யார் ? ஆர்யா, விஜய் சேதுபதி ருசிகர விவாதம்

105

தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து ‘புறம்போக்கு’ படத்தை ஆரம்பித்துவிட்டார். இப்படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, தனது தயாரிப்பு நிறுவனமான பைனரி பிக்சர்ஸ் கம்பெனியின் முதல் தயாரிப்பாக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் ஜனநாதன்.

இந்தப்படத்திற்கான விளம்பர படப்பிடிப்பை சமீபத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி இருவரையும் வைத்து நடத்தினார் ஜனநாதன். அப்போது படத்திற்கு ‘புறம்போக்கு’ என பெயர் வைத்திருப்பதால் டைட்டில் ரோலில் நடிக்கும் ‘புறம்போக்கு’ யார் என ஆர்யாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் ஒரு ருசிகரமான விவாதம் ஆரம்பித்தது.

அப்போது இயக்குனர் ஜனநாதன் இடையே நுழைந்து, “பொதுமக்களுக்கு பயன்படுற எல்லாமும், எல்லாருமே புறம்போக்கு தான். இப்ப உங்க ரெண்டு பேர்ல யார் புறம்போக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ” என்று சொன்னதும் மொத்த யூனிட்டுமே சிரிக்கத் தொடங்கியதாம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் குலுமணாலியில் தொடங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.