பழசிராஜா கூட்டணியின் புதிய படம்

34

மலையாள எழுத்தாளர்களின் பிதாமகன் என்று சொல்லப்படுகிறவர் தான் எம்.டி.வாசுதேவ நாயர். இலக்கியவாதியான இவர் எழுதிய பல நாவல்கள் அற்புதமான திரைப்படங்களாக மாறியிருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2009ல் இவர் எழுதிய நாவல் தான் பழசிராஜா என்ற சூப்பர்ஹிட் படமாக வெளியானது. இந்தப்படத்தை ஹரிஹரன் இயக்க பழசிராஜாவாக மம்முட்டி நடித்திருந்தார்.

தற்போது எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய மற்றொரு கதை தான், ஏழாமத்தே வரவு என்ற பெயரில் படமாக உருவாகியிருக்கிறது. பழசிராஜாவை இயக்கிய ஹரிஹரனே இந்தப்படத்தையும் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இணையும 14வது படம் இது. இந்தப்படத்தில் வினீத், இந்திரஜித், பாவனா ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.