
2007ல் வெளியான ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக ‘கத்தி’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என அரசல் புரசலாக ஒரு தகவல் பரவிக்கொண்டிருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ட்விஸ்டை உடைத்தார் முருகதாஸ்.
அதாவது அவர் பேசும்போது, “நான் விஜய்யிடம் உங்களுக்கு பிடித்த கேரக்டர் ‘துப்பாக்கி’ ஜெகதீஷா, இல்லை ‘கத்தி’ ஜீவானந்தமா அல்லது கதிரேசனா என்று கேட்டேன்.. அதற்கு அவர் ‘கதிரேசன்’ என்றுதான் பதில் சொன்னார். எனக்கும் ‘கதிரேசன்’ கேரக்டர்தான் பிடிக்கும்” என்றார் முருகதாஸ். இதன்மூலம் விஜய் இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதை முருகதாஸே உறுதி செய்துவிட்டார்.
Comments are closed.