சென்னை ஓபன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார் மகிபால் சிங்!

182

தமிழ் நாட்டைச் சேர்ந்த மகிபால் சிங், சென்னையில் உள்ள லெட்ஸ் போலில் நடைபெற்ற சென்னை டைமண்ட்ஸ் 2 வது சென்னை ஓபன் டென்பின் போலிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

தலைவரை சவால் செய்யும் வடிவத்தின் அடிப்படையில் நடைபெற்ற ஓபன் டிவிஷன் இறுதிப் போட்டியில், இரண்டாம் சீட் பெனிகோபால்.எல், முதல் சீட் மகிபால் சிங்குக்கு எதிராக முதல் பந்தயத்தை (208-194) வென்றார்,

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க இரண்டாவது பந்தயம் ஆடப்பட்டது. இரண்டாவது பந்தயத்தில், மகிபால் மூன்று தொடர் ஸ்ட்ரைக்குகளுடன் தொடங்கி 200 ரன் எடுத்தார், அதே நேரம் பெனிகோபால் 168 ரன்களே எடுத்தார். இதன் மூலம் மகிபால் சாம்பியனாகத் திகழ்ந்தார்!

இதற்கு முன்னர், ஸ்டெப்லேடர் சுற்றின் முதல் போட்டியில், மூன்றாம் சீட் ஆனந்த்பாபு (தமிழ்நாடு), நான்காம் சீட் நவீன் சித்தம் (தெலுங்கானா) ஆகியோரை (222–183) வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெனிகோபால் லஹோட்டி, ஆனந்த்பாபுவை (223 — 191) எளிதாக வென்றார்.

இரட்டையர் பிரிவில், கர்நாடகாவைச் சேர்ந்த பர்வேஸ் அஹ்மத் மற்றும் கிஷன்.ஆர் (737 பின்ஸ்) ஆகியோர், தமிழ் நாட்டைச் சேர்ந்த குருநாத் மற்றும் சோபன்டி (735 பின்ஸ்) ஆகியோருக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை நெருங்கும்ம் நிலையில், 2 பின்கள் வித்தியாசத்தில் வென்றனர். இரண்டு பந்தயங்களின் மொத்த பின் ஃபாலின் அடிப்படையில் ஆடப்பட்ட டைட்டில் போட்டியின் முதல் பந்தயத்தில், நான்காம் சீட் பர்வேஸ் மற்றும் கிஷன்.ஆர் (386) மூன்றாம் சீட் குருநாத் மற்றும் சோபன் (385) ஆகியோரை 1 பின் வித்தியாசத்தில் விஞ்சினர். இரண்டாவது பந்தயத்தில், முன்னேற்றத்தைப் பெற இரு குழுக்களும் கடுமையாகப் போட்டியிட்டன, இறுதி சுற்றில் கிஷன்.ஆர் அடித்த ஒரு ஸ்ட்ரைக், கர்நாடக குழுவிற்கு (351-350) பட்ட வெற்றியை நிச்சயித்தது.

கிரேடு ஏ பிரிவில், முதல் 12 வீரர்கள் 8-பந்தயங்கள் கொண்ட மாஸ்டர்ஸ் சுற்றில் வெற்றியாளரைத் தீர்மானிக்க போட்டியிட்டனர். 8 பந்தயங்களின் முடிவில், தமிழ் நாட்டைச் சேர்ந்த குருநாத் 1556 மொத்த பின் ஃபாலுடனும், 194.50 சராசரியுடனும் முதலிடத்தில் வந்தார். அவரைத் தொடர்ந்து தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆனந்த்பாபு 1544 மொத்த பின்ஃபாலுடனும், 193.00 சராசரியுடனும் இரண்டாம் இடத்தில் வந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த சதீஷ்ஏ.வி. 1485 மொத்த பின்ஃபாலுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

கிரேடு பி பிரிவில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோஹித்சவுகான், 8 பந்தயங்களில் 1471 மொத்த பின்ஃபாலுடனும், 183.88 சராசரியுடனும் மாஸ்டர்ஸ் சுற்றில் வென்றார். டெல்லியைச் சேர்ந்த குஷால்கே.எஸ். 1429 மொத்த பின்ஃபாலுடன் (சராசரி 178.63) இந்த பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார்.ஆர். 1407 மொத்த பின்ஃபாலுடன் (சராசரி 175.88) மூன்றாம் இடத்தில் வந்தார்.

10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 போலிங் வீரர்கள் கலந்து கொண்ட இந்த சாம்பியன்ஷிப், பன்னிரண்டு நாட்கள் உயர் மின்னழுத்த போலிம் நிகழ்வுகளைக் கொண்டிருந்தது.

Comments are closed.