
இயக்குனர் சுசீந்திரனை சின்ன ரவிக்குமார் என்று தாராளமாக அழைக்கலாம். காரணம் தனது படங்களின் படப்பிடிப்பு நாட்களை சரியாக திட்டமிட்டு, குறித்த காலத்தில் எடுத்து,நேரத்தை மட்டுமல்ல, தயாரிப்பாளரின் காசையும் மிச்சப்படுத்துபவர்களில் இவரும் ஒருவர்.
தற்போது மூன்றாவது முறையாக . விஷ்ணுவை வைத்து தான் இயக்கிவரும் மாவீரன் கிட்டு’ படத்தின் 95 சதவீத படப்பிடிப்பை ஏக் தம்மில் ஒரே கட்ட படப்பிடிப்பாக 37 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறார் சுசீந்திரன். இன்னும் சென்னையில் எடுக்கப்பட வேண்டிய கொஞ்சம் காட்சிகள் தான் பாக்கி உள்ளனவாம். ஜீவா படத்திற்கு பிறகு இந்தப்படத்தில் விஷ்ணுவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா..
Comments are closed.