‘அரண்மனை’க்காக ஹைதராபாத் பறக்கிறார் ஹன்ஷிகா

120

கடந்த அக்டோபர் முதல் தேதி ‘அரண்மனை’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்தார் சுந்தர்.சி. கடந்த ஒரு வருடமாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு கலகலப்பு, மதகஜராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களை இயக்கிய சுந்தர்.சி தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். ‘அரண்மனை’ படத்தை இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.

மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் கூடவே இருந்து கலகலப்பூட்டி, தீயாக வேலை செய்ய வைக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சந்தானம். நிதின் சத்யாவுக்கும் இதில் முக்கியமான வேடம் இருக்கிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஹன்சிகா, தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறக்க இருக்கிறார். த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஹன்ஷிகாவுக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி சவாலான வேடம் என்பதால், இதுவரையிலான தனது நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்து வருகிறாராம்.

சுந்தர்.சிக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறார். வில்லன்களாக பருத்திவீரன் சரவணன், ராஜ்கபூர், விச்சு நடிக்க பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி.

Leave A Reply

Your email address will not be published.