‘சரபம்’ படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் கிடைக்காதுங்க” – சி.வி.குமார் ஓபன் டாக்

215

‘பீட்சா’, ‘தெகிடி’ வரிசையில் இன்னொரு க்ரைம் த்ரில்லராக சிவி.குமாரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘சரபம்’. சமஸ்கிருத வார்த்தையான ‘சரபம்’ என்றால் தமிழில் ‘யாழி’, அதாவது சிங்கப்பறவை என்று அர்த்தமாம். இந்தப்படத்தை இயக்கியுள்ள அருண்மோகன் வேறு யாருமல்ல, இயக்குனரும் காமெடி நடிகருமான அனுமோகனின்( ஏனுங்க படையப்பரே.. இந்த பாம்பு புத்துக்குள்ள கைய விட்டீங்களே… என ரஜினியை விடாமல் துரத்துவாரே) மகன் தான்.

“மாட்டிக்காம தப்பு பண்றதுன்னா நான் ரெடி” அப்படிங்கிற ஆளுதான் படத்தின் ஹீரோ. பிரம்மன் படத்தில் சசிகுமாரின் நண்பனாக நடித்தாரே நவீன் சந்திரா அவர்தான் ஹீரோ,. அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த சலோனி நடிக்க, ஆடுகளம் நரேனுக்கும் இதில் முக்கியமான வேடம் இருக்கிறது.

இந்தப்படத்தின் ஷூட்டிங்கை 30 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என தயாரிப்பாளர் சி.வி.குமார் முதலிலேயே கண்டிஷன் போட்டுவிட, இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி ஒரு நாள் முன்னதாகவே அதாவது 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்துவிட்டாராம் இயக்குனர் அருண்மோகன்..

30 நாட்கள் என கண்டிசன் போடுவது இயக்குனரின் சுதந்திரத்தை பறிப்பது மாதிரி இல்லையா என தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் கேட்டால். “ஒரு படத்திற்கு பிஸினஸ் வேல்யூ எவ்வளவு என்பதைப் பொறுத்துதான் படப்பிடிப்பு நாட்களை கணக்கிடுகிறோம். மேலும் இந்தப்படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட் கிடைக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அதனால் வரிவிலக்கும் கிடைக்காது. அந்த இழப்பையெல்லாம் இந்த ஷூட்டிங் நாட்களை குறைப்பதன் மூலம் தான் ஈடுகட்ட முடியும்” என்கிறார். அவர் சொல்வதும் நியாயம் தானே..

Comments are closed.