புலி வருது புலி வருது கதையாக இதோ பிரிந்துகிடந்த அ.தி.மு.க அரசின் இரு அணிகளும் இன்று இணைந்துவிட்டன. கடந்த ஜனவரி மாதம் முதற்கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கமல், கிண்டலாகவும் காட்டமாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது தெரியும்.
அதனால் தற்போது அ.தி.மு.க-வின் இரு அணிகளின் இணைப்பும கமலின் சாடலுக்கு தப்பவில்லை. இது குறித்து கமல் ”காந்திக் குல்லா! காவிக் குல்லா! கஷ்மீர் குல்லா! தற்போது கோமாளிக் குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” என்று டிவிட்டரில் கூறியுள்ளார்

Comments are closed.