திருட்டு விசிடிக்கு எதிராக பார்த்திபன் போர்க்கொடி..!

228

வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை ரிலீஸ் செய்கிறார் பார்த்திபன்.. ‘அஞ்சான்’ படம் அதே தேதியில் வெளியாவது ஒரு சவால் என்றால், படம் வெளியான அடுத்த நாளே திருட்டு விசிடிக்கள் சந்தையில் இறங்கிவிடும் இன்னொரு சவாலையும் பார்த்திபனும் எதிர்நோக்கித்தானே ஆகவேண்டும்.

அதனால் திருட்டி விசிடியை ஒழிப்பது குறித்த இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கம் ஒன்றை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நேற்று நடத்தினார் பார்த்திபன்.. ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், “திருட்டு விசிடியில் திரைப்படங்களை பார்க்க அனுமதிக்க மாட்டோம்” என்கிற உறுதிமொழியை அதில் கலந்துகொண்ட இளைஞர்கள் எடுத்துக்கொண்டனர்.

Comments are closed.