
‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் நடித்திருந்தாலும் ஆரியை அடையளம் கட்டியதென்னவோ சமீபத்தில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படம் தான். அதைத்தொடர்ந்து தற்போது நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு ஆரிக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதுதவிர தற்போது ‘கடை எண் 6’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஆரி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஹீரோயின் யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை இந்தப்படத்தை ஆர்.சசிதரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அட்டகத்தி தினேஷ், ஹரிப்ரியா ஆகியோரை வைத்து இயக்கியுள்ள ‘வாராயோ வெண்ணிலாவே’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது
Comments are closed.