
ஒருபக்கம் நான் கட்டும் வரிப்பணம் எங்கே போச்சு என காட்டமாக கேள்வி எழுப்பினாலும், இன்னொரு பக்கம் சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிகளுக்காக கமல் தனது பங்களிப்பாக 15 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, தனது நற்பணி இயக்க தோழர்களையும் நிவாரண பணியில் முடுக்கி விட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் நேற்று சிந்தாரிபேட்டை, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு மேலான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று ஜாபர்கன்பேட்டை, ராமாபுரம், சைதாப்பேட்டை பகுதிகளில் நடைபெருகின்றது..
Comments are closed.