ஹன்சிகா புராணம் பாடும் ‘உயிரே உயிரே’ படக்குழுவினர்..!

139

uyire uyire

முன்னாள் நடிகை ஜெயப்ரதா தனது மகன் சித்துவை தமிழில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த, தானே தயாரித்துள்ள படம் தான் ‘உயிரே உயிரே’.. ஹன்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘சத்யம்’ ராஜசேகர் இயக்கியுள்ளார். ஏப்-1ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் ஹைலைட்ஸ் பற்றி படக்குழுவினர் பகிர்ந்துகொண்டார்கள்..

என் அம்மாதான் எனக்கு நடிப்பு பயிற்சி பள்ளி

படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது, “‘உயிரே உயிரே’ எனது முதல்படம். ஹன்சிகா நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார். என்னுடைய அம்மா 300படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எனவே தனியாக எந்த ஒரு நடிப்புப் பயிற்சிக்கும் செல்லவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னுடைய அம்மாவின் பெயருக்கு களங்கம் வராமல் நான் நடந்து கொள்வேன். என்னுடைய கனவு இன்று நனவானது” என கூறினார்

ஹன்ஷிகா தான் வேணும்

இயக்குநர் ராஜசேகர் பேசும்போது, “தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற ‘இஷ்க்’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘உயிரே உயிரே’. தெலுங்கில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஜெயப்ரதா மேடம் என்னை அழைத்து இதை தமிழில் பண்ணவேண்டும் என சொன்னபோது, நான் அவர்களிடம் வைத்த ஒரே வேண்டுகோள் ஹன்சிகா தான் இந்தப்படத்திற்கு நாயகியாக வேண்டும் என்பதுதான். சித்துவும், ஹன்சிகாவும் அருமையாக நடித்துள்ளனர்.

ஹன்சிகாவை பார்த்து பொறாமைப்பட்ட ஜெயப்ரதா

“நடிகைகளிலேயே நான் மிக அழகான பெண் என்று ‘லெஜண்ட்ரி இயக்குநர் சத்யஜித்ரே’ என்னிடம் கூறுவார். ஆனால் இந்தப்படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை ‘அழகே அழகே’ என வர்ணித்தது எனக்கு சற்று பொறாமையாகத்தான் இருந்தது. ஹன்சிகாவின் நடிப்பு இந்தப் படத்தின் மூலம் இன்னும் மெருகேறியுள்ளது” என பேசினார் ஜெயப்ரதா

ஹன்சிகாவுக்கு கோவில் கட்டுவார்கள்

வசனகர்த்தா பாலாஜி பேசும்போது, “காதல் திருமணங்களைப் பற்றிய ஒரு அருமையான பதிவு இந்தப்படம். இந்தப்படத்திற்குப் பிறகு ஹன்சிகாவிற்கு தமிழகத்தில் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என அடுத்த பாரபர்ப்பிற்கு திரி கிள்ளினார்..

தெலுங்கில் அரை சதம் ; தமிழில் ஆரம்பம்

இசையமைப்பாளர் அனுப்ரூபன், “தெலுங்கில் 50 படங்களுக்கு மேல் பணியாற்றிய எனக்கு தமிழில் முதல்படம் இது. இந்தப்படத்தில் ஜெயப்ரதா மேடம் ஒரு பாடல் பாடியுள்ளார். பாடல் காட்சிகள் மட்டுமின்றி அனைத்துமே மிகச்சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

Comments are closed.