இக்கட்டான சூழ்நிலையில் கவுதம் மேனன்

125

எப்போதோ நடந்த பிரச்சனைகள் இப்போதும் இயக்குநர் கவுதம் மேனனை விடாமல் துரத்திக் கொண்டு தான் இருக்கின்றன. 2010-ல் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இந்தி ரீமேக்கை ‘ஏக் தீவானா தா’ என்ற பெயரில் இயக்கினார் கவுதம்.

இந்தப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான ஆர்.ஜெயராமன் என்பவரிடம் கவுதம் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் கதாஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையை ஏமாற்றி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதி, கவுதம் மேனன் மற்றும் போட்டான் கதாஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அவரது நான்கு உதவியாளர்கள் மீதும் இந்த வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு பரிந்துரை செய்துள்ளது. இது தற்போது சிம்புவை வைத்து படம் இயக்கிவரும் கவுதம் மேனனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.