‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என நம்ம ஊரில் பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். தான் உயிரோடு இருக்கும்போது உதவுவதாக வாக்களித்த ஒருவருக்கு தான் இறந்தபின்னும் உதவிய ஒரு உத்தமர்தான் இந்த சீதக்காதி. இஸ்லாமியரான இவரை பதினெட்டாம் நூற்றாண்டு பாரி வள்ளல் என்றுகூட சொல்வார்கள்..
நிற்க.. இப்போது இவரைப்பற்றி முன்னுரை கொடுக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தானே கேட்கிறீர்கள்.? விஷயம் இருக்கிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் தான் அடுத்ததாக இயக்கவுள்ள படத்திற்கு ‘சீதக்காதி’ என்றுதான் பெயர் வைத்துள்ளாராம்.
இந்தப்பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றமாதிரி கதையை உருவாக்கியுள்ள பாலாஜி தரணீதரன், தன்னுடன் முதல் படத்தில் பணியாற்றிய அதே டீமையே இந்தப்படத்திலும் பயன்படுத்தப் போகிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.