தமிழ்ப்படங்கள் தான் என்றாலும் பெரும்பாலான படங்களில் கதையை காரணம் காட்டி ஷூட்டிங்கிற்காக மும்பைக்கும் இன்னும் சில வெளிநாடுகளுக்கும் டூர் கிளம்பிவிடுகிறார்கள் நம்மவர்கள். அப்படித்தான் இப்போது இந்திய-திபெத் எல்லைப்பகுதியில் நமது தமிழ்சினிமா படப்பிடிப்பு குழுக்கள் முகாமிட்டு இருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர்தான் தல-55 (சீக்கிரம் பேர் வைங்கப்பா) படத்திற்காக கௌதம் மேனன், அஜித், அனுஷ்கா உட்பட படக்குழுவினர் திபெத் எல்லைக்கு சென்று பல காட்சிகளை படமாக்கிவந்தார்கள். இப்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்துக்காக இந்த ஏரியாவில் முகாமிட்டுள்ளனர். கேங்டாக், சிக்கிம், பூடான், மற்றும் நேபாளம் என தொடர்ந்து 2௦ நாட்கள் படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர்.
Comments are closed.