கடந்த சில வருடங்களுக்கு முன் வடிவேலு கதையின் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இனிதே ‘டரியலுடன்’ துவங்கிவிட்டார்கள்.. முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இந்தப்படத்தையும் இயக்குகிறார்.
முதல் பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கர், தன்னுடன் லைகா நிறுவனத்தை கூட்டு சேர்த்துக்கொண்டு இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இவர் அஜித்தின் ‘பில்லா-2’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.