தமிழகத்தில் அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது என சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அவரை ஏகத்துக்கு வசைபாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் பொது மேடையிலேயே வருமான வரித்துறையை ஏவிவிடட்டுமா என்கிற ரீதியில் கமலை பகிரங்கமாக மிரட்டுகிறார்..
இந்தநிலையில் கமல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது.. அவர் உண்மையைத்தானே சொல்கிறார் என கமலுக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.. கமல் சொன்னால் அவர் நடிகர் என்பதால் பாய்கிறீர்களே, அரசியல் கட்சியாகிய அதையே நான் சொல்கிறேன்.. எங்கே என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்” என பகிரங்கமாகவே அரசுக்கு சவால் விட்டுள்ளார் சீமான்.

Comments are closed.