
பிலிம்பேர் விருதுகளை போலவே சைமா (தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா) விருதும் திரையுலகினர் அனைவரும் பெற விரும்பும் விருதுதான்.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப்படங்களுக்கு 19 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
தற்போது 5வது வருடமாக 2014ம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் துபாயில் நடக்கிறது. இதற்கான முறையான விழா பற்றிய அறிமுகம் மற்றும் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் நடிகர் ராணா, நடிகைள் அமலாபால், டாப்ஸி, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.