ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு தடை நீங்கியது..!

132

kadavul-irukaan-kumaru-1

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் நாளை வெளிவர உள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ (கிக்). ஆனால் இந்தப்படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என மெரினா பிக்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் சிங்காரவேலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

காரணம் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தரவேண்டும் என்றும் அவர் தலைமறைவாக உள்ளதால் அவருடைய பங்குதாரர் டி..சிவா பெயரில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட முயற்சிகள் நடப்பதாகவும், இந்த படத்தை வெளியிட்டு விட்டால் தன்னால் பணத்தை வசூலிக்க முடியாது எனவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி.சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை என்றும் உத்தரவிட்டார்.

Comments are closed.