விட்டதை பிடித்தார் ‘ராஜபாட்டை’ நாயகி..!

112

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’யில் கதாநாயகியாக நடித்தவர் தீக்சா சேத். படம் முழுவதும் பொம்மை மாதிரி வந்து படத்தின் தோல்விக்கு, ஏதோ தன்னாலான பங்களிப்பை செய்த அவருக்கு அதன் பின் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் சிம்பு நடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ‘வேட்டை மன்னன்’ படத்தில் தீக்சாவும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் கிட்டத்தட்ட அந்தப்படம் கைவிடப்பட்ட நிலையில், அதன்பின்னர் தெலுங்கில் நடிக்க போய்விட்டார். தற்போது அதிர்ஷ்டவசமாகவோ அல்லது விதிவசமாகவோ செல்வராகவன் இயக்கும் படம் மூலமாக மீண்டும் சிம்புவுடன் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சம்மரில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.

Comments are closed.