30 கோடி ரூபாயை தானமாக தந்தவரின் முன்னிலையில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழா..!

210

பாலம் கல்யாணசுந்தரம்.. இந்தபெயரை அறியாதவர்கள் இருக்கலாம். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினியும் அவரது மனைவி லதாவும் தங்கள் தந்தையாக ஒரு மாமனிதரை தத்து எடுத்துக்கொண்ட விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்தப்பெருமைக்குரிய மனிதர் தான் பாலம் கல்யாணசுந்தரம்..

அமெரிக்காவில் தனக்கு வழங்கப்பட்ட விருதுத்தொகையான 30 கோடி ரூபாயை அங்கே உள்ள தொண்டு நிறுவனங்களுக்கே தானமாக கொடுத்துவிட்ட வள்ளல். அதனாலேயே அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது தேடிப்போய் இவரை சந்தித்த அதிசய நிகழ்வும் நடந்தது.

அப்படிப்பட்ட மாமனிதர் முன்னிலயில் நேற்று ‘பெருமாகோவில் உண்டச்சோறு’ என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பேரரசு, ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். வி.டி.ராஜா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஆர்.ஆர்.கார்த்திக் என்பவர் இசையமைத்துள்ளார். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

Comments are closed.