சில குறும்படங்களை இயக்கிய அனுபவத்தை வைத்து மட்டுமே காதல் கலந்த காமெடி படமாக இந்தப்படத்தை இயக்கியுள்ளார் கிருத்திகா. கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் சிவாவுக்கும், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரும் ப்ரியா ஆனந்துக்கும் காதல் ஏற்படுகிறது. வெவ்வேறு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இடையே வரும் காதலும்,மோதலும் தான் படத்தின் பிரதானமான கதை.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட தீர்மானித்துள்ளனர்.