பதினேழு வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தப்படத்தை தற்போது ரீமேக் செய்யப்போவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. படத்தில் ஹீரோவாக நடிப்பது கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திகேதான். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
தந்தை நடித்த படத்தின் ரீமேக்கில் மகன் நடிப்பது தமிழ்சினிமாவில் இது இரண்டாவது முறை. ஏற்கனவே தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் ரீமேக்கில் அவரது மகன் பிரசாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.