ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நிழல் உலக தாதாவின் சதியால், பொய் வழக்கில் சிக்கி, ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து, நிழல் உலக தாதாவை பழிவாங்குவதற்காக அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான், படத்தின் பரபரக்க வைக்கும் கதை.
இந்தப்படத்தில் Dolby ATMOS என்ற புதிய சவுண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில், அதிலும் தெலுங்கு சினிமாவில், இந்தப்படத்தின் மூலம்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார்களாம். செப்டம்பர் 6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகவுள்ளது.