இந்தப்படத்தின் சம்பள விஷயத்தில் கூட ஒரு சாதனையை செய்துள்ளார் ராம்சரண். என்னதான் தங்களது மொழிகளில் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் பல முன்னணி நடிகர்கள் பாலிவுட் படங்களில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும்போது அவர்களை ஒரு புதுமுகமாகத்தான் அங்கே எல்லோரும் பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்கான சம்பளமும் கூட அவர்களை புதுமுகமாக கருத்தில் கொண்டுதான் வழங்கப்படும்.
ராமையா வஸ்தாவையா படத்தில் நடித்த கிரிஷ் குமாருக்கு 9 கோடியும் ராஞ்சனா படத்தில் நடித்த தனுஷுக்கு 7 கோடியும் தான் சம்பளமாக தரப்பட்டது. ஆனால் தனது முதல் இந்திப்படத்திலேயே 12கோடி ரூபாய் ஊதியமாக பெற்றிருக்கிறார் ராம்சரண். இதன்மூலம் இந்தியில் அறிமுகமாகும் மற்ற மொழி நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிய பெருமையை தட்டிச்சென்றுள்ளார் ராம்சரண்.