‘ராஜாராணி’ படத்தின் வெற்றியை கமலுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார் அட்லீ. மேலும் தனது வெற்றியை உலக நாயகனுடன் பகிர்ந்துகொள்ள நினைத்த அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ், நயன்தாராவுடன் சென்று கமலை நேரில் சந்தித்துள்ளார். அப்போது படத்தைப்பற்றிய சின்னசின்ன விஷயங்களைக்கூட குறிப்பிட்டு அட்லீயின் டைரக்ஷனை பாராட்டியுள்ளார் கமல். அவரை சந்தித்துவிட்டு வந்தபின், “ராஜாராணி படம் வெற்றி அடைந்தாலும் இந்த மண்ணின் மைந்தனான கமல் சாரின் மூலமாக பாராட்டப்படுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இது எனது வேலைக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அட்லீ.