‘கலவரம்’ வன்முறை படமா என்று கேட்டால், “அப்படியெல்லாம் இல்லை.., கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி தான் இந்தத் திரைப்படம். இதில் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிப்பதே இந்த படத்தின் திரைக்கதையின் சிறப்பு” என்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.
படம் தயாராகி நீண்ட நாட்களாகியும் வெளியிடமுடியாத சூழல் இருந்தது. தற்போது ரிலீஸிற்கான வேலைகளை துரிதப்படுத்தி ‘ஜில்லா’, ‘வீரம்’ ஆகிய படங்களுடன் பொங்கல் வெளியீடாக இந்தப்படத்தை திரைக்கு கொண்டுவர தீர்மானித்திருக்கிறார்கள்.