இந்தச்செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தீபிகா படுகோன் அளித்த விருந்தில் அவரது மிக நெருங்கிய நண்பரான ரன்பீர் கபூர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அன்றைய தினம் அவருக்கு வேறு எந்த நிகழ்ச்சியோ அல்லது படப்பிடிப்போ இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இவர்கள் இருவருக்குமான நெருக்கம் நாடறிந்த விஷயம். இருவரும் காதலர்கள் என்று அறிவித்துக்கொள்ளாத குறை மட்டும்தான்.
இந்தப் புறக்கணிப்பிற்கான காரணம் என்ன என ஆராய்ந்தால். ரன்பீரிடம் தற்போது நெருக்கம் காட்டிவரும் அவரது புதிய தோழியான காத்ரினா கைஃப்பை இந்த விழாவிற்கு தீபிகா அழைக்காததால் அதை ஒரு மனக்குறையாக எடுத்துக்கொண்ட ரன்பீர் தானும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. ரன்பீரின் இந்த செயலால் காத்ரீனாவின் தொழில்முறை எதிரியான தீபிகா வருத்தத்தில் இருக்கிறாராம்.