இப்போது இந்த நிறுவனம் புதுமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். காமெடியுடன், மக்களுக்கு நல்ல ஒரு கருத்தைக் கூறும் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26ஆம் தேதி முதல் தென்காசியில் துவங்க இருக்கிறது.