மூடர்கூடம் இயக்குனரை பாராட்டிய மணிரத்னம்

சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘மூடர்கூடம்’. ‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருந்தார். தனது சிஷ்யருக்காக இந்தப்படத்தை தனது ‘பசங்க புரடக்ஷன்ஸ்’ மூலம் வாங்கி வெளியிட்டும் இருந்தார் பாண்டிராஜ். ‘நான்கு முட்டாள் திருடர்களும், வாழ்க்கையை தொலைத்ததாக சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக துடிக்கும் ஒரு வசதியான குடும்பமும்’ என ஒரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும்!.

ஆனால், இந்த கதையை காமெடியாக, கலர்புல்லாக, அதேசமயம் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருந்தார் நவீன். இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இயக்குனர் மணிரத்னத்தையே படம் பார்க்க தூண்டியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் மணிரத்னம் படம் பார்ப்பதற்காக சிறப்புக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார் நவீன்.

படம் பார்த்துவிட்டு வெளியேவந்த மணிரத்னம் நன்றாக இருக்கிறது என பாராட்டிவிட்டுப்போக வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதூதனிடம் வரம் வாங்கிய பக்தன் போல மெய்சிலிர்த்துப் போய்விட்டாராம் நவீன். அதுமட்டுமல்ல, போகும்போது “நாம் இருவரும் இன்னொரு நாள் சந்தித்து விலாவாரியாக பேசுவோம்” என மணிரத்னம் சொல்லிவிட்டு சென்றிருப்பதால் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் நவீன்.

நவீன்மணிரத்னம்
Comments (20)
Add Comment