தற்போது சூசன், ஹ்ருத்திக் ரோஷனிட ஜீவனாம்சமாக 100 கோடி ரூபாய் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கோபமான சூசன், ”நான் ஹ்ருத்திக்கிடம் இருந்து ஜீவனாம்சமாக 100 கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக பொய்யான தகவல்களை பத்திரிக்கைகள் வெளியிட்டு வருவது நெறிமுறையற்ற செயல்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவரின் தனிப்பட்ட செயல்களைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடுவது கூடாது என்றும், தாங்கள் இருவரும் இன்னும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். 4 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹ்ருத்திக் மற்றும் சூசன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.