கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீகே என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். ‘பயம்’ என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் தான் ‘யாமிருக்க பயமே’.
கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த வருடம் வெளிவர இருக்கும் படங்களில் இது மிக முக்கிய படமாக இருக்கும் என்கிறார் எல்ரெட் குமார்.