அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் ஆஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்த கோவில் கட்டும் திருப்பணியை துவக்கிய அர்ஜூன் சிறிதும் சோர்வில்லாமல் தொடர்ந்து வருகிறார்.
இந்தக்கோவிலில் நிறுவுவதற்காக ஏறக்குறைய 35அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் இருந்து ஒரே கல்லில் சிலையாக வடித்து சென்னைக்கு வரவழைத்து இருக்கிறார்கள். அதற்கான கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள். அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் உள்ளிருந்து அபிஷேகம் செய்யும் அதே முறையை பயன்படுத்தி இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அர்ஜுன் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.