செல்வராகவன், ஜெயம் ராஜா ரூட்டில் ஆதியின் அண்ணன்..!

தம்பிகளை முன்னணி ஹீரோக்களாக கொண்டுவந்ததில் இயக்குனர்கள் செல்வராகவன், ஜெயம் ராஜா இருவருமே தங்களது கடின உழைப்பை கொட்டியுள்ளது மறுக்க முடியாது… தங்களை சிறந்த இயக்குனர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதுடன், தங்களது தம்பிகளான தனுஷுக்கும் ஜெயம் ரவிக்கும் சரியான பாதை அமைத்துகொடுத்து அதிலும் ஜெயித்தது உண்மையிலேயே பெரிய விஷயம் தான்.

தற்போது நடிகர் ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸ் கூட அந்த ரூட்டைத்தான் பிடித்துள்ளார்.. ஆதி ஏற்கனவே ஐந்து படங் நடித்துவிட்டாலும், ஈரம் படத்திற்குப்பின் இன்னும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல் தான் இருக்கிறார். அதனால்தான் தனது முதல் படமான ‘யாகவராயினும் நாகாக்க’ படத்தை தம்பியை வைத்தே இயக்கியுள்ளார் அண்ணன் சத்யபிரபாஸ்.

தம்பி என்பதில்லாமல், இந்தக்கதைக்கும் பொருத்தமான ஹீரோவாக ஆதி இருந்ததுதான் முக்கிய காரணம். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்திருப்பது இன்னொரு ப்ளஸ். ஆதி மற்றும் மூன்று நண்பர்களைச் சுற்றியே கதை நிகழ்கிறது. ‘நான்கு வாலிபர்கள், ஓர் இரவு, ஒரு வார்த்தை’. இதுதான் கதைக்கரு அப்படி அவர்கள் பேசிய ஒரு வார்த்தை எப்படி அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு திசைமாற்றியது என்பதே படத்தின் கதை. வரும் ஜூன்-26ஆம் தேதி படம் வெளியாகிறது.

ஆதிசத்யபிரபாஸ்செல்வராகவன்ஜெயம் ரவிஜெயம் ராஜா