செப்-1ல் புதிருக்கு விடைசொல்ல தயாராகும் விஜய்சேதுபதி..!

விஜய்சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மெல்லிசை’. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு ‘மெல்லிசை’ என்ற தலைப்பு பொருத்தமாக இல்லை என கருதியதால், ‘புரியாத புதிர்’ என தலைப்பை மாற்றினார்கள்.. ஆனால் என்ன காரணத்தாலோ இந்தப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் முடங்கி கிடந்தது.
.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தப்படத்தை ரிலேஎஸ் செய்யும் பணிகளில் இறங்கிய இந்த நிறுவனம், சமீபத்தில் தங்களது தரமணி படத்தை வெளியிட்டது. அந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு உற்சாகம் தரவே சூட்டோடு சூடாக ‘புரியாத புதிர் படத்தை செப்-1ல் ரிலிஸ் செய்கிறார்கள்.

Puriyatha PuthirVijay Sethupathiபுரியாத புதிர்விஜய் சேதுபதி