விஜய்சேதுபதி நடிக்க த்ரில்லராக உருவாகும் ‘மெல்லிசை’

விஜய்சேதுபதி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அது நிச்சயம் வித்தியாசமான கதைக்களமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை, வரிசையாக ஹிட்டாகி வரும் அவருடைய படங்கள் நிரூபித்து வருகின்றன தன்மீது இப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு எழுந்துவிட்டதால் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாகவே இருக்கிறார் விஜய்சேதுபதி.

அப்படிப்பட்ட விஜய்சேதுபதியை தன்னுடைய ‘மெல்லிசை’ என்ற கதையைச் சொல்லி அசரவைத்துவிட்டார் புதுமுக இயக்குனர் ரஞ்சித். கதையைக் கேட்டதும் தனது கால்ஷீட்டுகளை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அவருக்கு தேதிகளும் தந்துவிட்டார் விஜய்சேதுபதி.

இந்தப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார். படத்தின் பெயர்தான் ‘மெல்லிசை’யே தவிர, படம் சரியான ஆக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்ததாம். இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க இருக்கிறது.

Vijay Sethupathiமெல்லிசைவிஜய்சேதுபதி
Comments (0)
Add Comment