அநேகன் படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கம் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது..இந்தப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.. இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் மீண்டும் நடிக்க, முக்கிய வேடத்தில் டி.ராஜேந்தர் நடிக்கிறார்.
அதேபோல சமீபத்தில் தான் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என புதிய நிறுவனம் துவக்கிய விக்ரம் பிரபு தான் நடிக்கும் ‘நெருப்புடா’ படத்தின் படப்பிடிப்பையும் இன்று துவக்கிவிட்டார்.. இந்தப்படத்தை அசோக் குமார் என்பவர் இயக்குகிறார்..கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்..