ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா இன்று பெற்றுக்கொண்டார்.
சென்னை லீ மெரிடியன் விடுதியில் நடந்த இவ்விழாவில் கவிஞர்கள் மூத்த கவிஞர்கள் முத்துலிங்கம், அறிவுமதி ஆகியோருடன் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து, நடிகர்கள் பாண்டியராஜன், ஜோ மல்லூரி, மற்றும் தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.