இயக்குனர் சிகரத்துக்கு நினைவஞ்சலி செலுத்திய சமுத்திரக்கனி..!

தமிழ்சினிமாவின் மாணிக்க கல்லாக திகழ்ந்து மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு இன்று இரண்டாம் நினைவு நாள்.. இந்தநாளில் தனது குருநாதருக்கு நினைவஞ்சலி செலுத்த விரும்பிய இயக்குனர் சமுத்திரக்கனி, தற்போது தான் இயக்கிவரும் ‘தொண்டன்’ படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்தார்..

பாலச்சந்தரின் உருவப்படத்துக்கு மாலையிட்டு சமுத்திரக்கனி அஞ்சலி செலுத்த, கஞ்சா கருப்பு உள்ளிட்ட படக்குழுவினரும் இயக்குனர் சிகரத்துக்கு தங்களது நினைவஞ்சலியை செலுத்தினர்.

K BalachandarSamuthirakaniசமுத்திரக்கனி