தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த அதேசமயம் ஆந்திராவில் என்.டி.ராமாராவும் முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.. அதுகுறித்து விசாரிக்க இரு முதல்வர்களின் ஒப்புதலோடும் தமிழ்நாடு போலீஸார் ஆந்திரா சென்று வெற்றிகரமாக தங்களது நடவடிக்கையை நிறைவேற்றினார்களாம்..
இந்த ஒரு அம்பவம் தான் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்தி கதையை உருவாக்குவதற்கு இயக்குனர் ஹரிக்கு தூண்டுதலாக அமைந்ததாம். அதை மையமாக வைத்து தனது அதிரடியான திரைக்கதையால் முந்திய இரண்டு பாகங்களை விட விறுவிறுப்பாக படமாக்கியுள்ளாராம்.டிச-23ஆம் தேதி இந்தப்படம் திரைக்கு வருகிறது.