பட வாய்ப்பு தேடும்போது தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கச் சொன்ன பாலசந்தரிடம் முதன் முதலில் ரஜினி நடித்துக் காட்டியது கன்னட நாடகத்தில் இருந்து ஒரு பகுதியைத்தான். நன்றாக தமிழ்பேச கற்றுக்கொள் என்று சொன்ன பாலசந்தர் ரஜினியை ஒப்பந்தம் செய்தது ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கு மட்டுமல்ல..
மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை(தெலுங்கு) என மூன்று படங்களுக்கும் சேர்த்து தான். ஒரு நடிகனாக இவர் தேறிவிடுவார் என மூன்று படங்களுக்கும் சேர்த்து அப்போதே ஒப்பந்தம் செய்தது பாலசந்தரின் தீர்க்கதரிசனம்.