பயணம் படத்திற்குப்பிறகு இரண்டு வருடம் கழித்து பிருத்விராஜ் தமிழில் நடிக்கும் நேரடிப்படம் இது. கூடவே இன்னொரு கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். பரதேசி படத்தின் மூலம் நடிப்பில் மெருகேறியுள்ள வேதிகாவுக்கு இந்தப்படம் இன்னொரு மைல்கல்லாக அமையும்.
காவியக்கவிஞர் வாலி மறைவதற்கு முன் பாடல் எழுதிய படமாக காவையத்தலைவன் அமைந்துவிட்டது. இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்தது மாதிரி ஏ.ஆர்.ரகுமானின் இசையும் சேர்ந்துகொண்டதால் காவியத்தலைவனை காவியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் வசந்தபாலன்.