மழை வெள்ளம் வடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டாலும் கூட இன்னும் பலரது வாழ்க்கை இயல்பு நிலைக்கு முழுவதும் திரும்பாமலேயே இருப்பது கண்கூடான உண்மை.. திரையுலகை பொறுத்தவரை ஒவ்வொரு துறையினருக்கும் அவர்கள் சார்ந்துள்ள சங்கங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் நடன கலைஞர்கள் சங்கத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களின் குடும்பத்துக்கு உதவும் விதமாக டான்ஸ் மாஸ்டர்களான பிரபுதேவாவும் ஷோபி மாஸ்டரும் இணைந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர்.