கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘பொட்டு’ இசை வெளியீடு..!

‘சௌகார்பேட்டை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கும் பேய்க்கதையையே ஆயுதமாக பயன்படுத்தியுள்ள இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப்படத்திற்கு ‘பொட்டு’ என பெயர் வைத்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் பரத். நாயகியாக இனியா நடித்துள்ளார்.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இங்கல்ல.. கோலாலம்பூரில் வைத்து பிரமாக நடத்தியும் விட்டார். இந்த விழாவில் அம்ரிஷின் இன்னிசைக்கச்சேரி நடைபெற்றது ஒரு பக்கம் இருக்க, படத்தின் நாயகன் பரத் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘சௌகார்பேட்டைBharathIniyaNamithaPottuஅம்ரிஷ்இனியாஜெயசித்ராநமீதாபொட்டுவி.சி.வடிவுடையான்